தாய் இறந்த சோகம் தாங்காமல் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!

தாய் இறந்த சோகம் தாங்காமல் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!

தற்கொலை

குரும்பூர் அருகே தாய் இறந்த சோகம் தாங்காமல் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் வனக்குமார் (31). இவரது தாயார் மாரியம்மாள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டாராம். தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த வனக்குமார், தாயாரின் மறைவால் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முகமது ரபிக் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story