அறிவிக்கப்படாத மின்வெட்டால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு!

அறிவிக்கப்படாத மின்வெட்டால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு!

அலங்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.


அலங்குடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆலங்குடியில் நேற்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது. அறிவிக்கப்படாத 2 மணி நேர மின்வெட்டால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், அரிசி ஆலைகள், அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. கோடைக்காலம் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். ஆலங்குடி பகுதிகளில் இதுபோல் அடிக்கடி மின்சாரம் தடை படுகிறது. மின்தடை குறித்து மின்வாரியம் முன் னதாகவே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story