கல்குவாரி இடையே தடுப்பற்ற சாலை - சிக்கராயபுரத்தில் ஆபத்தான பயணம்.

கல்குவாரி இடையே தடுப்பற்ற சாலை - சிக்கராயபுரத்தில் ஆபத்தான பயணம்.
சாலை தடுப்பு இல்லாததால் ஆபத்து 
குன்றத்துார் ஒன்றியத்தில் சிக்கராயபுரம் ஊராட்சி உள்ளது. இங்கு 200 முதல் 400 அடி ஆழம் கொண்ட, 22 கல்குவாரி குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளது. சென்னை குடிநீர் தேவைக்கு இங்கிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இந்த கல்குவாரிகளுக்கு இடையே சாலை உள்ளது. இந்த சாலை வழியே அரை கி.மீ., துாரம் பயணித்தால், எளிதாக குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையையும், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையையும் சென்றடையலாம். இந்த சாலை வழியே சிக்கராயபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் வேன், கார், மோட்டார் சைக்கிளில், ஆபத்தான வகையில் பயணிக்கின்றனர். எனவே, இந்த ஆபத்தான பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.

Tags

Next Story