சித்தலூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சித்தலூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

கள்ளகுறிச்சி மாவட்டம், சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரியநாயகி அம்மன் கோவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆடி மாத அமாவாசையான நேற்று மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து சாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து கோவிலின் முன்பு அமைக்கபபட்டிருந்த ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டார். தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டுப்பாடல்கள் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story