எல்லை பிடாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

எல்லை பிடாரி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

கோவில் திருவிழா


கடலூர் மாவட்டம் கண்ணாரப்பேட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ எல்லை பிடாரி அம்மன், ஶ்ரீ முத்துமாரியம்மன், ஶ்ரீ காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 ஆம் நாள் மண்டல அபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் எல்லை பிடாரி அம்மனுக்கு இரவு ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் குறிஞ்சிப்பாடி பம்பை உடுக்கை கலைஞர்களால் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story