பல நாட்களாக விநியோகிக்கப்படாத குடிநீர் - பொதுமக்கள் சாலைமறியல்

பல நாட்களாக விநியோகிக்கப்படாத குடிநீர் - பொதுமக்கள் சாலைமறியல்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

ஓமலூர் அருகே பல நாட்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூங்கில்பாடி ஊராட்சியில் சோரையான்காடு பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் பல நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு முறையிட்டும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் தாத்தையங்கார்பட்டியிலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் அரசு பேருந்தைச் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் காவல் நிலைய போலீசார் மற்றும் மூங்கில்பாடி ஊராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story