சீரற்ற குடிநீர் வினியோகம்: பொதுமக்கள் மறியல் போராட்டம்

சீரற்ற குடிநீர் வினியோகம்: பொதுமக்கள் மறியல் போராட்டம்

தென்னம்பட்டியில் சீரற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர். 

தென்னம்பட்டியில் சீரற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.

வடமதுரை : தென்னம்பட்டி கிராமத்திற்கான உள்ளூர் குடிநீர் ஆதாரம் என்பது மந்தைக்குளத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை நம்பி இருக்கிறது. இக்குளத்தில் மண் அள்ளுவோர் பயன்படுத்திய மண் அள்ளும் இயந்திரங்களால் குடிநீர் குழாய் பாதை சேதமானது. கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் நடக்காததால் பொதுமக்கள் அவதிபட்டனர். அதிருப்தியிலிருந்த பொதுமக்களை திரட்டிய வி.சி.,கட்சியினர் நேற்று காலை வடமதுரை ஒட்டன்சத்திரம் ரோட்டில் தென்னம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஊராட்சி தலைவர் கோமதிபாலசுப்பிரமணியும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி, குழாய் உடைப்பு சரிசெய்து சப்ளை வழங்கப்படும்' எனக்கூறவே கலைந்தனர்.


thennampattiyil

Tags

Next Story