உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
உங்களை தேடி உங்கள் ஊரில் 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்ச்சியில் கலெக்டர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார் உளுந்தூர்பேட்டை தாலுகா, திருநாவலூர் ஒன்றியம் திருநாவலூர் கூட்டுறவு வங்கி, அங்கன்வாடி, ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது கைரேகை பதிவு இயந்திரம் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது.

20 நிமிடங்களுக்கு பிறகு மாற்று ஏற்பாடு செய்து பொருட்கள் விநியோகத்தனர்.தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 6.15 மணியளவில் வருகைபுரிந்த கலெக்டர் ஷ்ரவன்குமார், பொது மக்களிடம் 116 மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மனுக்கள் பெறும் நேரம் குறிப்பிடாததால் பொது மக்கள் பல மணி நேரம் காத்திருந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

பலர் காலதாமதம் ஏற்பட்டதால் மனுக்கள் கொடுக்காமல் திரும்பி சென்றதால் மனுக்கள் கொடுப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயபிரபாகரன், நகராட்சி கமிஷனர் இளவரசன், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மணிமேகலை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story