சேலம் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம்

சேலம் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம்

மூதாட்டி உடல்

சேலம் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத மூதாட்டி சடலம் உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத (70) வயது பெண் சடலம். கடந்த 14 5 20 24ஆம் தேதி இரவு 07.30 மணிக்கு பூலாம்பட்டியில் இருந்து கோனேரிப்பட்டி ரோட்டில் குட்டியா கவுண்டன் வளவு சுப்ரமணியன் என்பவரது வீட்டின் அருகில் நடந்து சென்ற 70 வயது மதிக்கத்தக்க பெண் மூதாட்டி மீது TN36 j 526 என்ற எண் கொண்ட TVS எக்ஸ்எல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து ஓட்டுனர் மோதி விபத்து ஏற்பட்டதில்,

மூதாட்டிக்கு இடது முழங்காலுக்கு கீழ் ரத்த காயம் ஏற்பட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் போலீசார் விசாரணையில் அந்த மூதாட்டியின் பெயர் லட்சுமிபாய் (70) அவரது கணவர் வேலுநத்தக்கரை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமிபாய் இன்று 26.05.2024 ஆம் தேதி காலை 07.45 மணிக்கு இறந்து விட்டதாக 09.15 மணிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து இந்த மூதாட்டியின் முழு விபரம் தொலைபேசி எண் ஏதும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை இதனால் லட்சுமிபாயின் உடல் சேலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story