ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

போலீசார் விசாரணை 

கள்ளக்குறிச்சியில் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது.
கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் பகுதியில் உள்ள கோமுகி ஆற்றில் நேற்று காலை 7 மணியளவில் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story