விருதுநகர் : அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

விருதுநகர் : அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் அழுகை நிலையில் ஆண் சடலம் மீட்பு
பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தில் மீட்கப்பட்ட சடலம் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விருதுநகர் அருகே எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள தொட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் அழகிய நிலையிலிருந்து ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story