பெரம்பலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

 பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது. 

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள, அம்மா உணவகம் அருகில் பெயர் மற்றும் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கதக்க , ஆண் நபர், பேண்ட் மற்றும் சட்டையுடன் அவரது பாக்கெட்டில் இருந்து சில்லறைகள் பணங்கள் சிதறியபடி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி பொது மக்கள், பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர், அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிணவரையில் வைத்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story