தாமிரபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு !

தாமிரபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு !

மூதாட்டி உடல் மீட்பு

புதுக்கடை அருகே தாமிரபரணி ஆற்றில் அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் மீட்பு.போலீஸ் விசாரணை.

புதுக்கடை அருகே முஞ்சிறை பகுதி மங்காடு வழியாக குழித்துறை தாமிரபரணியாறு செல்கிறது. இந்த ஆற்றின் மங்காடு பாலத்தின் பகுதியில் பொது மக்கள் குளிக்கும் குளிக் கடவு உள்ளது. குளிக் கடவின் மேற்கு பகுதியில் இன்று மூதாட்டி சடலம் ஒன்று காணப்பட்டது.

இதைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் பார்வையிட்டு, குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர்.

பின்னர் போலீசார் உடலை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனார். மூதாட்டி யார் என தெரியவில்லை. மங்காடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மூதாட்டி ஆற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அல்லது வேறு ஏதாவது சம்பவமா என போலீசார் விசரித்து வருகின்றனர்.

Tags

Next Story