அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

விசாரணை

சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர், மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு.

சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர், மயங்கி விழுந்து உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருக்காம்புலியூர் பகுதியில், மார்ச் 28-ம் தேதி இரவு 8:30- மணி அளவில், அடையாளம் தெரியாத 55 வயது மதிக்க ஆண் நபர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

திருக்காம்புலியூர் மர அறுவை மில் அருகே நடந்து சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டுகரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, திருக்காம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் குருந்தோகை வயது 24 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த அந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை அடையாளம் காண்பதற்காக திருச்சி அரசு மருத்துவமனை தவக்கிடங்கில் இருப்பு வைத்து, இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story