எடப்பாடியில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

எடப்பாடியில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

அடையாளம் தெரியாத நபர் 

எடப்பாடியில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்ததை அடுத்து அந்நபரின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு அறையில் வைக்கப்பட்டுள்ளது
சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 4.02.24 தேதி காலை 9.45 அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக 7.02.24 அன்று காலை 11.40 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 9.02.24 அன்று மதியம் 1 மணியவில் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த எடப்பாடி காவல்துறையினர் பிரேதத்தை சேலம் அரசு மருத்துவமனை மார்ச்சுறியில் வைத்து (45) மதிக்கதக்க நபரை பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story