சீருடை பணியாளர் எழுத்து தேர்வு

சீருடை பணியாளர் எழுத்து தேர்வு

சீருடை பணியாளர் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சீருடை பணியாளர் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் 5378 நபர்கள் தேர்வில் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நான்கு தேர்வு மையங்களான தூயநெஞ்சக்கல்லூரி, வாணியம்பாடி ஜெயின் கல்லூரி, பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி, இஸ்லாமியா கல்லூரி உள்ளிட்ட நான்கு தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஆண்கள்_4335 ,பெண்கள்_1043 என மொத்தம் 5378 நபர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதனை தொடர்ந்து தேர்வு எழுது மையங்களில் தேர்வு எழுத வரும் ஆண்கள் மற்றும் பெண்களை பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story