ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ஜெயங்கொண்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம் 

ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைப்பெற்றது. ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரவிசங்கர் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் ஒன்றிய செலவினங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கபட்டு தீர்மானம் நிறைவேற்றபட்டது.

மேலும் குடிநீர் வசதி, சாலைவசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதில் துணை தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story