கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம்!

கந்தர்வகோட்டையில் ஒன்றிய குழு கூட்டம்!


கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 23-ஆவது ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் ரெத்தினவேல் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.


கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 23-ஆவது ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் ரெத்தினவேல் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் 23-ஆவது ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் ரா. ரெத்தினவேல் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழு துணைத் தலைவர் செந்தாமரை வடிவேல் குமார் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராமன் வரவேற்றார். அலுவலர் பரமேஸ்வரி வரவு - செலவு கணக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் உறுப்பினர் ஆர். கலியபெருமாள் பேசுகையில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில், கோதண்டராமர் கோயில், சிவன் கோயில், வெள்ளை முனீஸ்வரர் கோயிலுக்கு குளியல் அறையுடன் கூடிய கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றார். உறுப்பினர் மா. ராஜேந்திரன் பேசுகையில், ஊராட்சியில் உள்ள வங்கார ஓடை குளத்துக்கான மழைநீர்வரத்து வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு மழைநீர் வரும் வழியை சரி செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும், அலுவலர்கள் மற்றும் அலுவலக கணக்காளர் வீரடிப்பட்டி குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story