ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி

மாணவர் சேர்க்கை பேரணி

திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணகி தலைமை வைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு திருப்பாலைத்துறை பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளியில் சேர்வதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு அரசின் அனைத்து இலவச திட்டங்களும் கிடைக்கும் எனவும் உள்பட அனைத்து சிறப்பம்சங்களையும் வலியுறுத்தி பேரணியில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்கள். இப்பேரணியில் பட்டதாரி ஆசிரியர் சண்முக வடிவு, உதவி ஆசிரியர்கள் மாலா, சங்கரி, இல்லம் தேடி கல்வியாளர்கள் கவிதா, கலைச்செல்வி, கல்வியாளர் இந்திரா, மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story