கோவிலை சுத்தம் செய்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

கூடலூர் அருகே உள்ள மண்வயல் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தூய்மை பணியில் ஈடுபட்டார்.
மத்திய அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்க நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மண்வயல் கிராமத்திற்கு வருகை தந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செல்லும் வழியில் இருந்த சிவன் கோவிலை பார்வையிட்டார். அப்போது பொங்கல் விழாவிற்காக கிராமப் பெண்கள் கோவிலை சுத்தம் செய்த போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்டியை மடித்து கட்டி வாளியில் தண்ணீரை கொண்டுவரச் சொல்லி கோவிலை துடைத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தார். கோவிலை சுற்றியுள்ள சுவர்கள் மட்டுமின்றி கோவில் முன்பு இருந்த பகுதிகளையும் தண்ணீர் ஊற்றி அவரே சுத்தம் செய்தார்.

Tags

Next Story