நாமக்கல்:மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம்

நாமக்கல்:மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம்

சாமி தரிசனம்

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தனது குடும்பத்தினருடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனம் செய்தார்.

மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று கலந்து கொண்டார். முன்னதாக, பரமத்தி வேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையம் பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து நாமக்கல் நகரில் அருள்மிகு நரசிம்மர் சுவாமி திருக்கோவில், தாயார் சன்னதி, அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகிய கோவில்களில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.வடை மாலை சார்த்தபட்டது. முன்னதாக நாமக்கல் விருந்தினர் மாளிகையில் மத்திய இணை அமைச்சர் முருகன் நாமக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். இந்த நிகழ்வின் நகர பா.ஜ.க தலைவர் சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன்,மாவட்ட, நகர ஒன்றிய பாஜகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story