திருவாரூரில் மத்திய இணை அமைச்சர் வி கே சிங் வாக்கு சேகரிப்பு

திருவாரூரில் மத்திய இணை அமைச்சர் வி கே சிங் வாக்கு சேகரிப்பு

கோப்பு படம் 

திருவாரூரில் மத்திய இணை அமைச்சர் வி கே சிங் வாக்கு சேகரித்தார்.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் சாலை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை மத்திய இணை அமைச்சர் வி கே சிங் உரையாற்றினார்.

பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட நாகை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் கோவிந்துக்கு தாமரை சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க உறுதியளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story