இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

விழுப்புரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

விழுப்புரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட் டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாநில கவுரவ தலைவர் பழனியப்பன், மாநில தலைவர் சங்கர், பொருளா ளர் சுந்தரமூர்த்தி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், தேச நலன் காக்க வேண்டுமெனில் முற்போக்கு ஜனநாயக கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் கட்சி தலைமையி லான இந்தியா கூட்டணியை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆதரித்து பா.ஜனதா அரசை வீழ்த்த வேண்டும், ராகுல்காந்தியை பிரதமராக்க தேர்தல் பணியாற்ற வேண்டும், மழை வெள்ளத்தி னால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட வேண்டும், விழுப்புரம் நகராட் சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களையும், கடைகளையும் அகற்றி நீரோட்டம் சரியான பாதைகளில் செல்ல வழிவகை செய்ய வேண்டும், மரக்காணம் உப்பளத்தை அரசே நடத்த வேண்டும், மரக்காணம் வரை கடல் அரிப்பை தடுக்கும் விதத்தில் கருங்கல் கொட்டி கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story