சீரமைக்கப்படாத வடகுப்பம் இணைப்பு சாலை

சீரமைக்கப்படாத வடகுப்பம் இணைப்பு சாலை

சீரமைக்கப்படாத வடகுப்பம் இணைப்பு சாலை

பள்ளிப்பட்டில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை செல்லும் வழியில், வடகுப்பம் அருகே ஓடை குறுக்கிடுகிறது. இதற்கான தரைப்பாலம், கடந்த சில மாதங்களுக்கு முன் விரிவாக்கம் செய்து புதிதாக கட்டப்பட்டது. இதனால், வாகனங்கள் எளிதாக இந்த ஓடையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாலம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், அதற்கான இணைப்பு சாலைக்கு தார் போடப்படாததால், பாலத்தை ஒட்டி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வழக்கமான வேகத்தில் வரும் வாகனங்கள், பாலத்தை கடக்கும் போது, பலத்த அதிர்வுக்குள்ளாகின்றன. இருசக்கர வாகனங்கள் துாக்கி வீசப்படும் நிலை உள்ளது. மேடு, பள்ளத்தை கவனிக்க முடியாத அளவிற்கு, பாலமும், இணைப்பு சாலையும் மண் பரவியுள்ளது. பெரும் விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பாக, இணைப்பு சாலைக்கு, தார் போட்டு சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story