திருமணமாகாத விரக்தி; ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை . 

திருமணமாகாத விரக்தி; ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை . 
பைல் படம்
கோழிப்போர் விளை பகுதியில், திருமணமாகாத விரக்தியில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.

குமரி மாவட்டம் கோழிப்போர் விளை பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (49). இவர் அந்தப் பகுதியில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஜெராக்ஸ், கம்ப்யூட்டர் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அவர் கடை திறக்கவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாம்ராஜுக்கு போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்தவர்கள் அவரது வீட்டுக்கு சென்று போது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

கதவை உடைத்து பார்த்த போது சாம்ராஜ் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர். ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது சகோதரி தங்கலெட் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story