அசத்திய பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் பல்நோக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடந்தன.

செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மணி அளவில் பள்ளி வளாகத்தில் MI DAY ( Multiple Intelligence ) என்று மாணவர்களின் பல்நோக்கு திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வு பள்ளி தாளாளர் திருமதி ஸ்ரீதேவி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்..

அதில் ( கேஜி மற்றும் ஆரம்ப வகுப்பில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வாசித்தல் , ஆங்கிலம், கணிதம் ,அறிவியல், ஹிந்தி என்று பல்வேறு துறைகளில் தம் திறமைகளை வெளிப்படுத்தி காட்டினர். அவற்றைப் பள்ளி தாளாளர் திருமதி ஸ்ரீதேவி பார்வையிட ஏராளமான பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் திறமைகளை கண்டு பாராட்டி மகிழ்ந்தனர். விழாவின் நிறைவாக பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் தாளாளர் அவர்கள் பரிசினை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்..

Tags

Next Story