டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பயணிகள் நிழற்குடை புதுப்பிப்பு

டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பயணிகள் நிழற்குடை புதுப்பிப்பு

நிழற்குடை புதுப்பிப்பு

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நரசன்விளை கிராமத்தில் பேருந்து பயணிகள் நிறுத்தம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நரசன்விளை கிராமத்தில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடை ரூ.82,600 மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையை நிறுவனத்தின் முதுநிலை பொது மேலாளர் கேசவன் திறந்து வைத்தார். விழாவில் நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story