ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேம்படுத்த பள்ளி வகுப்பறை

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேம்படுத்த பள்ளி வகுப்பறை

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை திறப்பு 

புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேம்படுத்த பள்ளி வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது.

மேற்கு தாம்பரம் பூந்தண்டலம் ஊராட்சியில் உள்ள புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை மற்றும் கற்றல் முறைத் திட்டம் (ஸ்மாா்ட் கிளாஸ்) துவக்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி நிா்வாகம் சாா்பில், சுற்றுவட்டார கிராமங்களில் இதுவரை நல்லூா் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு கணினி மற்றும் சூரிய ஒளி மின்வசதி கட்டமைப்பு, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி போன்ற பல்வேறு வசதிகள் இலவசமாக செய்து தரப்பட்டுள்ளன. இதற்கான அனைத்து தொழில் நுட்பப் பணிகளையும் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் உருவாக்கிக் கொடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

விழாவில் பூந்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் எம்.ஞானபிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியை டி.ராஜலட்சுமி,ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வா்கள் பொற்குமரன், பழனிக்குமாா், இயக்குநா்கள் பழனியாண்டி,கே.மாறன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story