வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புயல் மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்பாடி வழியாக சென்னை செல்லக்கூடிய ரயில்கள், காட்பாடியிலேயே நிறுத்தப்படுகிறது . சென்னை செல்லக்கூடிய பயணிகள் பேருந்துகள் மூலம் சென்னை செல்வதற்கு, காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து , வேலூர் புதிய பேருந்து நிலையம் வரை பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்க , மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூர் பேருந்து நிலையத்தில் வருகை தந்து, அங்கிருந்து பயணிகள் பேருந்துகள் மூலம் சென்னைக்கு செல்கின்றனர்.

Tags

Next Story