மதுரவாயல் தரைப்பாலங்கள் சீரமைக்க வலியுறுத்தல்

மதுரவாயல் தரைப்பாலங்கள் சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த தரைப்பாலம்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் தரைப்பாலம் சேதமடைந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்
மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே அடையாளம்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் தரைப்பாலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது, இந்த தரைப்பாலங்கள் மூழ்குவது வாடிக்கை. கடந்த 2021ம் ஆண்டு பெய்த கன மழையில் தரைப்பாலம் மூழ்கி, இருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து, மதுரவாயல் ஆற்றின் குறுக்கே இரு மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பெய்த கன மழையில் கூவம் ஆறு கரைபுரண்டு ஓடியது. இதில், மதுரவாயல் மற்றும் நொளம்பூர் பகுதியை இணைக்கும் மதுரவாலய் மேம்பாலத்தின் கீழ் உள்ள தரைப்பாலமும், கோயம்பேடு ரயில் நகர் பகுதியை இணைக்கும் தரைப்பாலமும் உடைந்துள்ளன. உடைந்த தரைப்பாலங்களை சீர் செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story