திருமயத்தில் குளிர் பதன கிடங்கு அமைக்க வலியுறுத்தல்

திருமயத்தில் குளிர் பதன கிடங்கு அமைக்க வலியுறுத்தல்

குளிர்பதன கிடங்கு அமைக்க கோரிக்கை

திருமயத்தில் குளிர் பதன கிடங்கு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமயத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அமைச்சர் ரகுபதிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் திருமயம் தாலுகாவில் பலா, வெள்ளரி, தேங்காய், கத்தரி, தக்காளி, வெண்டை ,கீரை, முள்ளங்கி, முருங்கைக்காய், வெங்காயம், நிலக்கடலை, மாம்பழம், வாழைப்பழம் ஆகவே பெருமளவு விளைகின்றன இவற்றை ஓரிரு நாட்களில் விற்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க திருமயத்தில் குளிர்பதன கிடங்கு அமைத்தால் அதில் விளைபொருட்களை பாதுகாத்து உரிய நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்க வாய்ப்பு ஏற்படும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story