காங்கிரஸ் கட்சியில் சொத்து மீட்புக் குழுவை அமைக்க வலியுறுத்தல் !!

காங்கிரஸ் கட்சியில் சொத்து மீட்புக் குழுவை அமைக்க வலியுறுத்தல்  !!

காங்கிரஸ் கட்சி

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் சொத்து மீட்புக் குழுவை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட நிா்வாகிகள், கோட்ட தலைவா்களுடனான கலந்தாய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான எல்.ரெக்ஸ் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக அகில இந்திய செயலாளா் கிறிஸ்டோபா் திலக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடா்பாளா் வேலுசாமி ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், கோட்ட தலைவா்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, வரகனேரி இஸ்மாயில், அரியமங்கலம் அழகா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு, கட்சி வளா்ச்சி குறித்து கருத்துக்களைத் தெரிவித்தனா்.

கூட்டத்தில், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சொத்து மீட்புக் குழுவை அமைக்க வேண்டும். ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஏற்படுத்த வேண்டும். அணி மற்றும் பிரிவு அமைப்புகளுக்கு பொறுப்பாளா்களை நியமிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஊடகப்பிரிவு இணைந்து காணொலி கூட்டத்துக்கான புதிய இணைப்பை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story