தென்காசியில் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !

தென்காசியில்  போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !

தென்காசி

போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தென்காசி மாவட்டம் தென்காசி மினி பஜார் பகுதியில் போதை ஆசாமிகள் காலையிலேயே குடித்து விட்டு நடு ரோட்டிலும் வீட்டு வாசல்களிலும் படுத்து அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் எழுப்பினாலும் போதை ஆசாமிகளை தடுக்க முடியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மினி பாராக செயல்படுவதும், சாலையில் பெண் குழந்தைகள் மற்றும் நடந்து செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. ஆகவே காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story