சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தல்

சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொன்னமராவதி அருகே சேதமடைந்துள்ள சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஆவாம்பட்டியிலிருந்து படுதினிப்பட்டி வழியாக சடையம்பட்டி செல்லும் இச்சாலை சுமார் 5 கிமீ தூரத்திற்கு மிகவும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண்சாலை போலக் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே உடனடியாக இங்கு புதிய சாலையாக அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story