உசிலம்பட்டி : விலையில்லா மிதிவண்டி வழங்கல்

உசிலம்பட்டி : விலையில்லா மிதிவண்டி வழங்கல்

மிதிவண்டி வழங்கல் 

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ ஐயப்பன் வழங்கினார்.
தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு ஏதுவாக சென்று வருவதற்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டிபி ரோட்டில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டியை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி தொடங்கி வைத்தார்.இதில் 200க்கும் மேற்ப்பட்ட மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள் ,ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story