கோவில்களில் தொடரும் திருட்டு

ஊத்தங்கரையில் தொடர்ந்து கோவில்களில் திருட்டு சம்பவம் நடப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஊத்தங்கரை அருகே தொடர்ந்து ஐந்து கோயிலில் திருட்டு சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய பகுதிகள் தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் மற்றும் சிலையில் இருக்கக்கூடிய தாலி தங்கச் சங்கிலிகள் உட்பட நகை திருடு சென்றதாக அப்பகுதி பூசாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பு ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் செயல்படக்கூடிய காவலர்கள் சீரும் சிறப்புமாக செவ்வனே செயல்பட வேண்டிய நிலையில் இது ஒரு துக்ககரமான நிகழ்வாகவே அப்பகுதி கிராம மக்கள் கருதுகின்றனர். ஊத்தங்கரை உட்கோட்டத்தில் காவலர்களின் செயல்பாடுகள் துரிதப்படுத்த வேண்டும் மற்றும் அப்பகுதியில் திருடுபடப் பொருட்களை மீட்க வேண்டும் என அப்போது கிராம மக்கள் வேண்டி கேட்டுக் கொள்கின்றனர்

Tags

Next Story