சங்கடி வீரனார் திருக்கோவிலில் உற்சவ விழா

சங்கடி வீரனார் திருக்கோவிலில் உற்சவ விழா

சங்கடி வீரனார் திருக்கோவிலில் உற்சவ விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது.


சங்கடி வீரனார் திருக்கோவிலில் உற்சவ விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சங்கடி வீரனார் திருக்கோவிலில் உற்சவ விழா முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் சுதை சிற்ப குதிரை வாகனத்தில் அருட்பாளிக்கும் கருப்பண்ண சுவாமிக்கு ரோஜா மலர் மாலைகள் அணிவித்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து மூலவர் சங்கடிவீரனார் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து வண்ண மலர்மாலைகள் மற்றும் பல வகை பழ மாலைகள் சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சங்கடி வீரனார் ஸ்வாமியை வழிபட்டனர்

Tags

Next Story