தருமபுரி மாவட்டத்தில் கன்று குட்டிகளுக்கு தடுப்பூசி முகாம்

தருமபுரி மாவட்டத்தில் கன்று குட்டிகளுக்கு தடுப்பூசி முகாம்

மாவட்ட ஆட்சியர் 

வீச்சு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கன்று குட்டிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற உள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது பாக்டீரியா கிருமிகளால் புருசெல்லோசிஸ் எனும் கன்று வீச்சு நோய் கால்த டைகளை பாதிக்க வாய்ப் புள்ளது.

இந்நோய் மாடு-ஆடு போன்ற அசையூட்டும் பிராணிகள், நாய், குதிரைகளுக்கும் ஏற்படும். இறந்த நிலை யில் கன்று அல்லது குட்டி பிறத்தல், நலிந்த கன்றுகள், நச்சுக்கொடி விழாமல் தங்குதல், பால் உற்பத்தி குறைதல் போன்றவை இதன் பாதிப்புகளாகும். நாட்டின மாடுகளில் கருச் சிதைவு ஏற்படும்.

இந்நோய் கால்நடைகளிலிருந்து மனிதர் களுக்கும் தொற்றும் நோயாகும். கால்நடைகளோடு நெருங்கி பழகும் விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் துறைப்பணியாளர்கள். இறைச்சி கடைகளில் பணிபுரிவோர், ஆராய்ச்சி பணியாளர்கள், கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் இறைச்சியை நுகர்வோர் ஆகியோர் களை தாக்கும் அபாயம் உள்ளது. நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் சுத்திகரிக்கப்படாத பால் மற்றும் இறைச்சி பொருட்களை உட்கொள்வதாலும்,

நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளின் சுரப்புகள் மற்றும் உயிர் கழிவுகளோடு தொடர்பு ஏற்ப டும் போதும் நோய் பரவும்வாய்ப்புள்ளது. இந்நோய் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவு. மனிதர்களில் இந்நோய் எலும்பு மற்றும் மூட்டு அழற்சி, தண்டு வட எலும்புகளில் அழற்சி. கல்லீரல்ல் நோய், வயிறு மற் றும் குடல்களில் அழற்சி, இனப்பெருக்க உறுப்புகளில் அழற்சியை ஏற்படுத்தும் சில நேரங்களில் இந்நோய் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு, கண்கள் மற்றும் இதயத்திலும் பாதிப்பு ஏற்படுத்தும் சில நேரங்களில் இறப்பும் ஏற்ப டும்.கால்நடைகளில் இந்நோய் தடுப்பதற்காக போது மான அளவு தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்று தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் வரும் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் 4 மாதம் முதல் 8 வயது முடியவுள்ள கிடேரி கன்றுகளுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் கிடேரி கன்றுகளுக்கு அடையாள காது வில்லைகள் பொருத்தப்படும்.

இந்த தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்பட்டால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புத்திறனை வெளிப்ப டுத்தும் எனவே, கால்நடை வளர்ப்போர் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட் டுக்கொண்டு கன்று வீச்சு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுடன் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story