ரோட்டில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி

ரோட்டில் திரியும் நாய்களுக்கு தடுப்பூசி
 விருதுநகரில் ரோட்டில் ஆங்காங்கே திரியும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விருதுநகரில் ரோட்டில் ஆங்காங்கே திரியும் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகளை விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியோர்களை தெரு நாய்கள் கடிப்பது அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை கால்நடை மருத்துவமனை இணைந்து தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது .

விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்ற நிலையில், மதுரை சாலையில் கால்நடைத்துறை உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமையில் உதவி மருத்துவர் தங்கபாண்டி மற்றும் அவருடைய குழுவினர் அங்கு சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.

Tags

Next Story