வடலூர் சர்வதேச மையம்: எடப்பாடி கண்டனம்

வடலூர் சர்வதேச மையம்: எடப்பாடி கண்டனம்
பக்தர்களை ஏமாற்றும் வகையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை தி.மு.க., அமைப்பது கண்டனத்துக்கு உரியது என எடப்பாடியார் கூறியுள்ளார்.
தைப்பூசத் திருநாளில் அருட்பெருஞ்ஜோதியைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி காத்திருப்பதற்கு பொது வெளியை ஏற்படுத்தினார். அந்த பொதுவெளியை, பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராக 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம்' கட்டும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, 'வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தை’ வடலூரிலேயே வேறொரு இடத்தில் கட்டுமாறு இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story