வடவாளத்தில் மது எடுப்பு திருவிழா

வடவாளத்தில் மது எடுப்பு திருவிழா

மது எடுப்பு விழா

புதுக்கோட்டை அருகே வடவாளத்திலுள்ள செல்லாயி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே வடவாளத்திலுள்ள செல்லாயி அம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, வடவாளம், செட்டியாபட்டி, கதுவாரிப்பட்டி, சின்னையா சத்திரம், இச்சடி, காயம்பட்டி, கீழ செட்டியாபட்டி உள்ளிட்ட 18 பட்டிகளைச் சேர்ந்த கிராம மக்கள் புதன்கிழமை மது எடுப்பு ஊர்வலம் நடத்தினர்.

கடந்த ஒரு வாரமாக விரதம் இருந்து நேர்த்திக் கடனைச் செலுத்தும் வகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மேளதாளங்களுடன் ஊர்வலம் வந்தனர்.

இந்த மது எடுப்பு ஊர்வலம் வடவாளம் சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பின்னர் செல்லாயி அம்மன் கோயிலை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து செல்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story