நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தொடக்கம்

நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தொடக்கம்
நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தொடக்கம்
நரசிம்ம பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா இன்று தொடங்கியது.

சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள நரசிம்ம பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால குடைவரை கோவிலான இங்கு நரசிம்ம பெருமாள் முக்கண்ணோடு அமர்ந்து அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் இந்த கோவிலில் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான வைகாசி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. விழா தொடர்ந்து 27-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு 14-ந்தேதி காலை சூரியபிரபை வாகனம், மாலை ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து நரசிம்மர் அருள்பாலிக்கிறார். 15-ந்தேதி கருடசேவை விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மாலை ஹனுமந்த வாகனத்திலும், 16-ந் தேதி காலை சேஷவா கனத்திலும் எழுந்தருள்கிறார். பின்னர் ஏகாந்த சேவை, திருமஞ்சனமும், மாலையில் சந்திரபிரபை வாகன வீதி உலா நடக்கிறது. 17-ந்தேதி நாச்சியார் திருக்கோலமும், மாலை யாளி வாகனமும், 18-ந்தேதி காலை சூர்ணா பிஷேகம், மாலையில் யானை வாகனத்திலும் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந்தேதி காலை நடக்கிறது.

சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கையுடன் திருத்தேர் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர் அன்று மாலை விசேஷ திருமஞ்சனம், தேர்முட்டி மண்டகப்படி, இரவு அனுமார் சன்னதி வரை பெருமாள் எழுந்தருளல் நடைபெறுகிறது. 20-ந்தேதி பல்லக்கு, குதிரை வாகனத்தில் எழுந்தருளல்,21-ந்தேதி தீர்த்தவாரி விமரிசையாக நடைபெற உள்ளது. 22-ந்தேதி காலை துவாத சாராதனம் திருமஞ்சனம், மாலையில் தங்க தோளுக்கினியான் உற்சவம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தொடர்ந்து மாலையில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story