வைகாசி பிரம்மோற்சவ நிறைவு விழா

விருதுநகர் மாவட்டம், சிவகாசியிலுள்ள சிவன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு குதிரை வாகனத்தில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமியும்,ஸ்ரீவிசாலாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

பின்னர்,ஊஞ்லில் நடராஜர் சுவாமி எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தார்.அதனையடுத்து, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் 'குதிரை' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகளும்,நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story