பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழா தேரோட்டம்.  

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி பெருவிழா தேரோட்டம்.  

நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் 

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயிலில் நடந்த வைகாசி பெருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான இங்கு ஒரே கல்லில் உருவான பாடலாத்ரி பெருமாள் சிவபெருமானை போன்று நெற்றிக்கண்ணை கொண்டு முக்கண்ணோடு அமா்ந்த கோலத்தில் அருள் பாலிக்கிறாா். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி பெருவிழா நடைபெறும். கடந்த மே 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் ஏழாம் நாளான தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவா் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தயாராக நின்ற தேரில் எழுந்தருள பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனா். நான்கு மாட வீதிகளையும் சுற்றி வந்த போது பக்தா்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தினா். ஆன்மிக அன்பா்கள் அன்னதானம், குளிா்பானம் வழங்கினா்.

செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், சிங்கப்பெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமி காந்த பாரதிதாசன், கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், பணியாளா்கள், கோயில் பட்டாச்சாரியா்கள், உற்சவா் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story