7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி திருவிழா !

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி திருவிழா !

திருவிழா

கானூரில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வைகாசி திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கானூர் பெரியநாச்சியம்மன் கோயிலில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் வைகாசி திருவிழா நடைபெற்றது. கானூர், புல்வாய்கரை, வேம்பத்தூர், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கிராமமக்கள் கானூர் பெரியநாச்சி அம்மனை வழிபடுகின்றனர்.

கானூர் பெரியநாச்சி அம்மன் கோயிலில் கானூர், கல்லூரணி, புல்வாய்க்கரை, வேம்பத்தூர், திருப்பாச்சேத்தி, ஒக்கப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து ஏழு வருடங்களுக்கு ஒரு முறை களரி திருவிழா நடத்துவது வழக்கம், இந்த களரி திருவிழாவிற்காக கானூரில் இருந்து விரதமிருந்த பக்தர்கள் நடைபயணமாக (போக வர 80 கி.மீ.,) மதுரை வரை சென்று அங்கு இருந்து பூஜை பொருட்களை வாங்கி மண்பானையில் நிரப்பி அதனை தலைச்சுமையாக ஊருக்கு கொண்டு வந்து பூஜை செய்து வருகின்றனர்.

பாரம்பரியம் பாரம்பரியமாக இந்த திருவிழா நடந்து வருகின்றன. இந்தாண்டு திருவிழா கடந்த ஏழாம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. மதுரையில் இருந்து பூஜை பொருட்களை தலைச்சுமையாக கொண்டு வந்து வைகை ஆற்றில் வைத்த பின் அங்கிருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக பெரியநாச்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பூஜை பொருட்களை வைத்து சிறப்பு பூஜை நடத்திய பின் அந்த மண் பானையில் கோயில் பொங்கலை வைத்த பின் மற்ற கிராமமக்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைக்கின்றனர். பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அம்மனுக்கு மண்பானையில் பூஜை பொருட்கள் வாங்கி வந்து பூஜைகள் செய்து வழிபட்டால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும், பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழவும் இந்த விழா நடத்தப்படுகிறது.

Tags

Next Story