ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா

ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் திருவிழா

 பரவை ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா

பரவை ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பரவையில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா மற்றும் முக்கனி பூஜை விமர்சியாக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பட்டத்தரசி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தை சேர்ந்த பூசாரி கோட்டைச்சாமி சாமியாடி குணசேகர் பாண்டி சேதுராமன் முருகன், செல்வம், சரவணன் முத்துச்சாமி முத்துக்குமார் முருகேசன் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முக்கனி படையலிட்டும் பொங்கலிட்டும் வழிபாடு நடத்தினர்.அதனைத் தொடர்ந்து 1000 க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் நடைபெற்றது.

Tags

Next Story