மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடக்கம்

மீனாட்சி அம்மன் கோயில் 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் தொடங்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் இன்று தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் 22-ஆம் தேதி வரை (1 முதல் 9-ஆம் திருநாள் வரை) சுவாமி, அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணியளவில் திருக்கோயிலில் இருந்து புதுமண்டபம் சென்று தீபாராதனை சிறப்பு பூஜை முடிந்ததும்,

அங்கிருந்து நான்கு சித்திரை வீதிகளில் உலா சென்று திருக்கோயில் சேத்தியாவர் மேலும், வருகிற 22-ஆம் தேதி 10-ஆம் திருநாள் காலையில் புதுமண்டபத்தில் எழுந்தருளி பகலில் தங்கி, வழக்கம் போல மாலையில் அபிஷேக தீபாராதனை முடிந்து, சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேர்வர்.

வசந்த உற்சவம் நடைபெறுவதையொட்டி வருகிற 13-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை திருக்கோயில் சார்பாக உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story