வைகாசி விசாக தேர்த்திருவிழா - இரண்டு நாட்கள் மின் நிறுத்தம்

வைகாசி விசாக தேர்த்திருவிழா - இரண்டு நாட்கள் மின் நிறுத்தம்

பைல் படம்

வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு வரும் 22, 24 தேதிகளில் மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை (புதன்கிழமை) மற்றும் அழகிரிநாத சாமி கோவிலில் வருகிற 24-ந் தேதியும் (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுகிறது.

இதையொட்டி அன்றைய தினங்களில் சேலம் கடைவீதி தேரடியில் தொடங்கி ஆனந்தா இறக்கம், 2-வது அக்ரகாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி, முதல் அக்ரகாரம் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக மின்கம்பிகள் அகற்றப்படுவதால் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story