பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்!

பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா ஆலோசனை கூட்டம்!

ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் இரண்டாம் ஆண்டு பிரமோற்சவ விழா, வைகாசி விசாக தேர்திருவிழா குறித்த பல்துறை துறை அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராணிப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் மனோன்மணி தலைமை தாங்கினார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமி முன்னிலை வகித்தார்.

செயல் அலுவலர் சங்கர் வரவேற்றார். கூட்டத்தில் வருகிற 13-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ள பிரமோற்சவ விழா உற்சவர் வீதி உலா, 22-ந் தேதி தேரோட்டம் குறித்தும், விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சிறப்பு பஸ், தடையில்லா மின்சாரம், தீயணைப்புத் துறை முன்னேற்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story