வைகாசி விசாக திருவிழா விரைவில் தொடக்கம்

வைகாசி விசாக திருவிழா விரைவில் தொடக்கம்

வைகாசி விசாக திருவிழா

பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா வரும் மே 16ம் தேதி துவங்க உள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு வரும் மே 16ம் தேதி துவங்க உள்ளது. அன்றைய தினம் பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் காலை 9 மணி மேல் 9.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி- தெய்வானை சமேதரராக முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்கக்குதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 21ம் தேதி நடைபெறுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story